Thursday, February 24, 2011

சுடலை ஞானம்


இவர்களுக்கு

சுதந்திரத்தின் மீதான பசி எடுத்த போது

நான் ஒரு வரலாற்றை ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தேன்..

நான் வரலாற்றுக்குள் இருந்த காலத்தில்

இவர்கள் பஞ்சனைகளின் கூரைகளில் இருந்தார்கள்

எனது காலத்தில்

எனக்காகவும் என்னனோடிணைந்தவர்களுக்காகவும்

பலர் வந்தனர்

பாரதி சொன்ன அக்கினிக் குஞசுகளைப் போலவும்

அர்ச்சுனனைப்போலவும்

எனக்காக வந்தவர் மீது

இன்று சுதந்திரம் பற்றிப் பேசுவோர்

கற்களை வீசினர் காறி உமிழ்ந்தனர் எனினும்

அவர்கள் சிந்திய ரத்தத்தில்

இவர்களுக்கான சுதந்திமும் இருந்தது

எனக்காக வந்தவர்

அவரவர் காரியம் முடித்து

யாரும் வரமுடியாப் பேரிருளுள்

வந்தவர் போயினர்….

எங்களின்காலத்தில்

கருத்துக்கள் மீது நித்திரை கொண்டபடி

நாக்கு வளிக்காமல் பேசித்திரிந்தவர்களுக்கு

இப்போது சுதந்திரப்பசி….

இவர்கள் வரலாறு ஒன்றை ஏப்பமிடும் காலத்தில்

இன்னும் சிலருக்கு சுதந்திரப் பசி எடுக்கும்.

No comments:

Post a Comment