Thursday, February 24, 2011

வேட்டுவச் சொற்களோடு புணருகிறாள்


இகம்பரமற்று சூரியன் குருடாகிக் குமைய

அபத்தத்தின் அரூபம் படிந்து

ஆதர்சியத்தை இழக்கிறது பெருவெளி

மூர்க்கத்தில் நேற்று வீங்கிய முலைகளில்

நீல வல்லிருள் படர

சோபிதங்களின் சுருக்கத்துள் சுருள்கிறது

அவள்தேகம்

சில்லீறுகளின் சத்தத்தில்

எரிந்த சிறட்டையின் கரியை மீண்டும்

அடுப்பில் போட்டு ஊதும் கிழவியின் சத்தம்

போர்வைகளில் ஊர்ந்து அவளின் ஆண்மாவைச் சுடும்

அடர் மழையொன்றுக்கு கறுப்புப்பிய மேகம்

கால்நீட்டும் கணத்தில்

திமித்த அவளின் மங்கலான உடலில்

துமிக்கிறது பயத்தின் மழை

வேட்டுவத்தின் சொற்களோடும்

மிருகத்தின் பற்களோடும்

அவளுக்காக சுறனையற்று விறைத்து நீழ்கிறது

வக்கிரத்தில் ஊதிய குறி

பல்லியைப் புணர படர்கிறது பாம்பின் நிழல்

அவள் வேட்டுவச் சொற்களோடு புணருகிறாள்

ஆடைகற்ற பொழுதுகளுக்கப்பால்

அவளின் வெட்கம் தற்கொலைத் தினவற்ற

வாழ்தலின் ஆசை மீதே சிவக்கிறது

தடுப்புக்காவல்களுக்குள் தொலையாதிருக்க

விதியின் மீது படுக்கை விரிக்கிறாள்

No comments:

Post a Comment