உலகத்தை புனைந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன்
என்னை புனையும் குறிப்புக்காக
அந்த குயவன் புனைந்த உலகம் கண்ணாடியிலான
மாயக்குவளையாக என் கைகளில் இருக்கிறது
அதன் ஒவ்வரு இழைகளும் மிக நூதனமானவை
உறவு உயர்வு இரக்கம் பொருள் என்ற படி
மாயக்குவளையின் ஒவ்வரு இழைகளும் இப்படித்தான்
அதனுள் என்னை ஊற்றுகிறேன்
குவளையில் நிரம்பி வழிகிறது நான்
மாயத்துள் மாயமற்று இருக்கிறது எனது உயிர்
குவளையாகி களிக்கிறது வழிகின்ற நான்
எனது எதிர்பார்ப்பின் தூர்தலில்
இழைகள் சிதைய உடைகிறது குயவனின் குவளை
உள்ளிருந்து நிலத்தில் சிந்திய என்னில்
துளிகளாய் சிதறிக்கிடக்கிறது நான் ஊற்றிய நம்பிக்கைகள்
என்னை ஊற்ற ஊற்ற மாயக்குவளை உடைகிறது
குயவனின் குறிப்புகளுக்குள் புகுந்து
என்னில் மாயயை புனைகிறேன்
மாயக்குவளைக்குள் மாயயை புனைந்த என்னை ஊற்ற
உடையாமல் இருக்கிறது குவளை
குவளையில் வழிகிறேன் மாயத்தில் ஊறிய நான்
உலக இயல்பில் இசைதலில் இருக்கிறது
எனது இருப்பு
No comments:
Post a Comment