Thursday, February 24, 2011

மாயக்குவளை

உலகத்தை புனைந்தவனை தேடிக்கொண்டிருக்கிறேன்

என்னை புனையும் குறிப்புக்காக

அந்த குயவன் புனைந்த உலகம் கண்ணாடியிலான

மாயக்குவளையாக என் கைகளில் இருக்கிறது

அதன் ஒவ்வரு இழைகளும் மிக நூதனமானவை

உறவு உயர்வு இரக்கம் பொருள் என்ற படி

மாயக்குவளையின் ஒவ்வரு இழைகளும் இப்படித்தான்

அதனுள் என்னை ஊற்றுகிறேன்

குவளையில் நிரம்பி வழிகிறது நான்

மாயத்துள் மாயமற்று இருக்கிறது எனது உயிர்

குவளையாகி களிக்கிறது வழிகின்ற நான்

எனது எதிர்பார்ப்பின் தூர்தலில்

இழைகள் சிதைய உடைகிறது குயவனின் குவளை

உள்ளிருந்து நிலத்தில் சிந்திய என்னில்

துளிகளாய் சிதறிக்கிடக்கிறது நான் ஊற்றிய நம்பிக்கைகள்

என்னை ஊற்ற ஊற்ற மாயக்குவளை உடைகிறது

குயவனின் குறிப்புகளுக்குள் புகுந்து

என்னில் மாயயை புனைகிறேன்

மாயக்குவளைக்குள் மாயயை புனைந்த என்னை ஊற்ற

உடையாமல் இருக்கிறது குவளை

குவளையில் வழிகிறேன் மாயத்தில் ஊறிய நான்

உலக இயல்பில் இசைதலில் இருக்கிறது

எனது இருப்பு

No comments:

Post a Comment